ADDED : ஏப் 25, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி மூவேந்திரன் 35. இவரது மனைவி சீதாலட்சுமி 30.
இருவரும் ஏப்., 10ல் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு டூவீலரில் அதிகாலை 5:30 மணிக்கு ஊருக்கு திரும்பினர்.
எஸ்.சென்னம்பட்டி - இடையபட்டி ரோட்டில் குறுக்கே வந்த காட்டுப்பன்றி மீது டூவீலர் மோதியது. இதில் இருவரும் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.
நேற்று சீதாலட்சுமி பலியானார்.
கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

