/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோயிலில் சஷ்டி விரதமிருக்க பெண் பக்தர்கள் போட்டி
/
கோயிலில் சஷ்டி விரதமிருக்க பெண் பக்தர்கள் போட்டி
ADDED : நவ 02, 2024 05:50 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் இன்று (நவ.2) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.
அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 8:45 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும்.
திருவிழா நாட்களில் கோயில் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வர்.
நேற்றமுன்தினம் மதியமே கோயிலுக்கு வந்து மண்டபங்களில் போர்வை விரித்தும், சாக்பீஸ்களால் தங்கள் பெயர், ஊர் பெயரை எழுதி இடம் பிடிக்க துவங்கினர்.