நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில், நான்காம் சங்கச் செயலாளர் மாரியப்பமுரளி தலைமையில் மகளிர் தின விழா நடந்தது. துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். மாணவர்களுக்கு செயலாளர் தசரதராமன் பரிசு வழங்கினார்.
மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசீலா பேசினார். மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் இந்துராணி நன்றி கூறினார். விரிவுரையாளர் அதிவீரபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

