நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் ரயில்வே மெயில் சர்வீஸ் (ஆர்.எம்.எஸ்.,) சார்பில் முதுநிலை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மகளிர் தின விழா நடந்தது.
மகப்பேறு டாக்டர் பூமாதா, தற்போதைய பணிச் சூழலில் பெண்கள் உடல்நலனில் காட்ட வேண்டிய அக்கறை, முறையான உணவுப் பழக்கம் குறித்து பேசினார்.
துணை கண்காணிப்பாளர் உமா தொகுத்து வழங்கினார். பணியில் சிறந்து விளங்கிய ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. கோட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த தபால் ஊழியர்கள் பங்கேற்றனர்.

