ADDED : டிச 26, 2025 06:04 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தியாகராஜர் மேலாண்மைப் பள்ளியில் உலக தியான நாள் விழா நடந்தது. இயக்குநர் முரளி சாம்பசிவன் வழிகாட்டுதலில் உடற்கல்வி ஆசிரியர் குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
உதவிப் பேராசிரியர் நடராஜ் மனத்தெளிவு, நிதானம், தார்மீகச் சிந்தனை, முடிவெடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் தியானத்தின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விளையாட்டு மன்றம் செய்திருந்தது.
