ADDED : ஜூலை 15, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் குருபூர்ணிமா வழிபாடு நடந்தது. வேதவியாசர், ஆதி சங்கரர் குரு திருவடி வேத சுலோகங்கள், வள்ளலார் திருவடி பதிகங்கள், குரு மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் பிரார்த்தனை செய்தார்.
பிரதோஷம்: வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயில் விஸ்வநாத சுவாமி, நந்திகேஸ்வரருக்கு பிரதோஷ கால அபிஷேகம், ஆராதனைகள்நடந்தன. சேவார்த்திகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிர்வாக தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

