நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை சிக்கந்தர் சாவடியில் தி.மு.க.,மதுரை மேற்கு ஒன்றியம் சார்பில் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சி.பி.ராஜா, இளையராஜா, முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் தனசேகரன் வரவேற்றார். சட்டசபை தேர்தல், விருதுநகரில் நடைபெற உள்ள தென் மண்டல இளைஞரணி மாநாடு குறித்து ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் இளங்கோ, வன்னிமுத்து, பாண்டி,சரவணகுமார், விஷ்ணு, காளிசரண், சுபாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

