நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இளைஞர் தின விழா நடந்தது.
மடத்தின் தலைவர் சுவாமி நித்திய தீபானந்தர் பேசுகையில், ''மனிதன் தன் வாழ்வை பயனுள்ளதாக்க லட்சியம் இருக்க வேண்டும். இளைஞர் பருவமே ஒருவரின் வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயிக்கிறது'' என்றார். தஞ்சாவூர் மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் பேசுகையில், ''ஒழுக்கமான, தைரியமுள்ள, சுயசார்புடைய, வலிமையானவர்கள் உள்ள இந்தியாவே விவேகானந்தரின் விருப்பம். அவரின் விருப்பத்தை இளைய சமுதாயம் நிறைவேற்ற வேண்டும்'' என்றார். திருவேடகம் விவேகானந்தர் கல்லுாரி முன்னாள் முதல்வர் வன்னியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

