sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மீனவர் வீட்டில் 10 சவரன் திருட்டு

/

மீனவர் வீட்டில் 10 சவரன் திருட்டு

மீனவர் வீட்டில் 10 சவரன் திருட்டு

மீனவர் வீட்டில் 10 சவரன் திருட்டு


ADDED : செப் 16, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை, : சீர்காழி அருகே மீனவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கோணயாம்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் நந்தகோபால்.65; மீனவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு அதே ஊரில் நடைபெற்ற சீதளா பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவிற்கு மனைவி வசந்தியுடன் சென்றார். வீட்டில் மருமகள் வைதேகி மட்டும் இருந்தார். வாசல் கதவை பூட்டி சென்றுள்ளனர். இரவு 11.30 மணி அளவில் வீட்டின் மற்றொரு அறையில் சத்தம் கேட்பதாக வைதேகி தனது மாமியார் வசந்திக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக நந்தகோபால் அவரது மனைவி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே அலமாரி கதவை உடைத்து அதிலிருந்து 10 சவரன் நகைகள் மற்றும் ரூ 31 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து நந்தகோபால் அளித்த புகாரின்பேரில் திருவெண்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us