sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறப்பு: உறவினர்கள் சாலை மறியல்

/

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறப்பு: உறவினர்கள் சாலை மறியல்

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறப்பு: உறவினர்கள் சாலை மறியல்

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறப்பு: உறவினர்கள் சாலை மறியல்


ADDED : செப் 03, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 03, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை : சீர்காழி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.

மயிலாடுதுறை அடுத்த கீழவள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி மகன் ஆனந்தன்,48; விவசாயி. இவருக்கு நேற்று காலை 6:10 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன், அவரை காலை 6:45 மணிக்கு கொள்ளிடம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் 8:15 மணிக்கு ஆனந்தன் இறந்து விட்டதாக அந்த டாக்டர் கூறினார்.

உடன் ஆனந்தனின் உறவினர்கள், தவறான சிகிச்சையால் இறந்துவிட்டதாக கூறி மருத்துவமனை கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டதுடன், ஆனந்தனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி- சிதம்பரம் சாலை போக்குவரத்து தடைப்பட்டது.

தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், பிரேத பரிசோதனை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மறியல் விளக்கிக் கொள்ளப்பட்டது.

பின்னர், ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us