sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

விஷம் கலந்த மது குடித்தவர் உயிரிழப்பு

/

விஷம் கலந்த மது குடித்தவர் உயிரிழப்பு

விஷம் கலந்த மது குடித்தவர் உயிரிழப்பு

விஷம் கலந்த மது குடித்தவர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 13, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, விஷம் கலந்த மதுவைக் குடித்த மரணம் அடைந்தார். அவரது உடலுடன் உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு,32. மனைவியை பிரிந்து வாழும் விரக்தியில், கடந்த 9ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

அப்போது, வீட்டுக்கு வந்த அவரது நண்பர் ஜெரால்டு,24;வும் அதே மதுவைக் குடித்தார்.

மயங்கிச் சரிந்த இருவரையும் இருவரையும் உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு ஜெரால்டு உயிரிழந்தார்.

இதுகுறித்த புகார்படி பெரம்பூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். உடற்கூறு ஆய்வுக்குப் பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று முன் தினம் மதியம் ஜெரால்டு உடலை ப்ரீசர் பாக்சுடன் செம்பனார்கோவில்- நல்லடை மெயின் ரோட்டில் கடலி பாலத்தில் வைத்து, ஜெரால்டை திட்டமிட்டு கொலை செய்த ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும்.

ஜெரால்டு குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியல் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ், மயிலாடுதுறை டி.எஸ்.பி., திருப்பதி ஆகியோர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us