sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

அரசு மருத்துவமனையில் ஊழியரை தாக்கியவர் கைது

/

அரசு மருத்துவமனையில் ஊழியரை தாக்கியவர் கைது

அரசு மருத்துவமனையில் ஊழியரை தாக்கியவர் கைது

அரசு மருத்துவமனையில் ஊழியரை தாக்கியவர் கைது


ADDED : செப் 11, 2024 01:58 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை,: சீர்காழி அருகே அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த தம்பதி பாலமுருகன் - பிருந்தா. இருவரும், கடந்த 8ம் தேதி டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.

இருவரையும் மீட்டு வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

இதனை அறிந்த பிருந்தா வின் உறவினர்கள் வைத்தீஸ்வரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து, பணியில் இருந்த டாக்டர் மற்றும் ஊழியர்களை தரக் குறைவாக பேசி, முறையான சிகிச்சை அளிக்க வில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சுகாதாரப் பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் கஜேந்திரன் வைத்தீஸ்வரன்கோவில் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அரசு மருத்துவமனை சுகாதாரப் பணியாளர் வீரமணியை தாக்கியதாக, தலைஞாயிறு தெற்கு தெருவை சேர்ந்த முருகானந்தம் மகன் முகேஷ்,26, என்பவரை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளரை முகேஷ் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.






      Dinamalar
      Follow us