ADDED : நவ 09, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே லாரி மோதி முதியவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,65; இவர், நேற்று முன்தினம் தஞ்சையில் வசித்து வரும் தனது மகனை பார்த்துவிட்டு இரவு 8:30 மணிக்கு சித்தர்காடு பஸ் ஸ்டாண்டில் இறங்கினார்.
அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றபோது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. அதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரவிச்சந்திரன், அங்கிருந்தவர்கள் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.