/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் திருடியவர் கைது
/
அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் திருடியவர் கைது
ADDED : ஜூலை 07, 2024 12:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் கம்பன் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53).
இவர் அரசு ஆசிரியர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு இவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 43 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டில் நகைகளை திருடிய ஒருவரை இன்று(ஜூலை 07) கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.