sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

முன்விரோத தகராறில் விவசாயியை வெட்டிக் கொல்ல முயன்ற மூவர் கைது

/

முன்விரோத தகராறில் விவசாயியை வெட்டிக் கொல்ல முயன்ற மூவர் கைது

முன்விரோத தகராறில் விவசாயியை வெட்டிக் கொல்ல முயன்ற மூவர் கைது

முன்விரோத தகராறில் விவசாயியை வெட்டிக் கொல்ல முயன்ற மூவர் கைது


ADDED : செப் 08, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 08, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இடப்பிரச்னையால் ஏற்பட்ட முன் விரோத தகராறில் வயலில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற சகோதரர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா மாதானம் கண்ணபிராட்டி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரவிச்சந்திரன்,40; விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் சாராய வியாபாரிகளான பரமசிவன் மகன்களுக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவிச்சந்திரன் நேற்று மதியம் செருகுடி மேல தெருவில் உள்ள தனது வயலில் டிராக்டரை கொண்டு உழவு பணியை மேற்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பரமசிவன் மகன்கள் கார்த்திகேயன்,35, நளமகராஜா,29, கோபாலகிருஷ்ணன்,36, ஆகிய மூவரும் உழவுப் பணியை தடுத்து நிறுத்தியதுடன், தங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரவிச்சந்திரனை வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் ரவிச்சந்திரனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us