ADDED : நவ 10, 2025 11:38 PM

மயிலாடுதுறை: எல்லை தாண்டியதாக மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே உள்ள வானகிரி கிராமத்தைச் சேர்ந்த ராமையன் விசைப்படகில், கடந்த 3ம் தேதி, 14 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் இரவு படகு பழுதடைந்து கடலில் தத்தளித்தனர்.
நேற்று அதிகாலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக கூறி, 14 மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்து, இலங்கை மயிலடி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
மீனவர்கள் 14 பேரையும் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்தும், மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்தும் ஊர்க்காவல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

