sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வீட்டின் கதவை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை.

/

வீட்டின் கதவை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை.

வீட்டின் கதவை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை.

வீட்டின் கதவை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை.


ADDED : ஜன 10, 2025 09:23 AM

Google News

ADDED : ஜன 10, 2025 09:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே பூட்டிய வீட்டின் பின்புற கதவை உடைத்து 150 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மங்கைமடம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்.62. தனியார் சர்க்கரை ஆலை தலைமை இயக்குனர். இவரது மகன் வெங்கடேஷ் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். மகள் அமிர்தவர்ஷினி திருமணமாகி வெளியூரில் உள்ளார்.

வீட்டில் செல்வேந்திரன், அவரது மனைவி லட்சுமி, மருமகள் மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். கடந்த 6ம் தேதி அமிர்தவர்ஷணியை பிரசவத்திற்காக மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக செல்வேந்திரன், அவரது மனைவி, மருமகள் மூவரும் மருத்துவமனையிலேயே தங்கி இருந்துவிட்டு குழந்தை பிறந்ததும் நேற்று இரவு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு 150 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us