/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மலைத்தேனீக்கள் கடித்து 7 பேர் காயம்
/
மலைத்தேனீக்கள் கடித்து 7 பேர் காயம்
ADDED : ஆக 24, 2024 11:59 AM

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட போது மலைத் தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பில்லா கவுண்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் காளியப்பன்.46. இவர் தனது குடும்பத்தினருடன் காரில் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோவிலுக்கு வந்துள்ளார். இவர்கள் நாராயணபுரம் முத்து முனீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆலமர நிழலில் அமர்ந்து தங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.
அப்போது மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்கள் கடித்து, காளியப்பன் மற்றும் அவரது உறவினர்களான உதயசந்திரன்,62, கலாவதி,55, தினேஷ்,16, சுதர்சன்,18, ஜனா,25, தமிழரசி ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மலைத்தேனிக்களின் கூடுகளை அழித்தனர்.

