sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மலைத்தேனீக்கள் கடித்து 7 பேர் காயம்

/

மலைத்தேனீக்கள் கடித்து 7 பேர் காயம்

மலைத்தேனீக்கள் கடித்து 7 பேர் காயம்

மலைத்தேனீக்கள் கடித்து 7 பேர் காயம்


ADDED : ஆக 24, 2024 11:59 AM

Google News

ADDED : ஆக 24, 2024 11:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: சீர்காழி அருகே மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட போது மலைத் தேனீக்கள் கடித்ததில் 7 பேர் காயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பில்லா கவுண்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் காளியப்பன்.46. இவர் தனது குடும்பத்தினருடன் காரில் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கோவிலுக்கு வந்துள்ளார். இவர்கள் நாராயணபுரம் முத்து முனீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆலமர நிழலில் அமர்ந்து தங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.

அப்போது மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்கள் கடித்து, காளியப்பன் மற்றும் அவரது உறவினர்களான உதயசந்திரன்,62, கலாவதி,55, தினேஷ்,16, சுதர்சன்,18, ஜனா,25, தமிழரசி ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மலைத்தேனிக்களின் கூடுகளை அழித்தனர்.






      Dinamalar
      Follow us