sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வீட்டு சுவர் விழுந்ததில் காயமடைந்த சிறுமி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலி

/

வீட்டு சுவர் விழுந்ததில் காயமடைந்த சிறுமி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலி

வீட்டு சுவர் விழுந்ததில் காயமடைந்த சிறுமி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலி

வீட்டு சுவர் விழுந்ததில் காயமடைந்த சிறுமி உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலி


ADDED : ஜூலை 25, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:ம யிலாடுதுறை அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இன்றியும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமாகியும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பரிதா பமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை அருகே உள்ள பொய்கைகுடியை சேர்ந்தவர் காமராஜ். வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவரது மனைவி சரண்யா, மகள்கள் சாஷா, 8, சஹானா ஸ்ரீ, 5, ஆகியோர் பொய்கைபாடி கிராமத்தில் வசித்தனர்.

இவர்களுக்கு சொந்தமான இடத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ஓராண்டாக வீடு கட்டும் பணி நடக்கிறது .

நேற்று முன்தினம், இவர்கள் இளைய மகள் சஹானா ஸ்ரீ, கட்டுமான பணி நடந்து வரும் வீட்டில் விளையாடிக் கொண் டிருந்தபோது, உட்புற சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் இல்லாத நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனிடையே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்திரமடைந்த சிறுமியின் உற வினர்கள், பொதுமக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லாதது, ஆம்புலன்ஸ் வர தாமதமானதை கண்டித்து மறியலி ல் ஈடுபட்டனர்.

மணல்மேடு போ லீசார் பேச்சு நடத்தி, சமாதானம் செய்ததை தொடர்ந்து கலைந்தனர்.

போராட்டம் காரணமாக திருமங்கலம்- -- மணல்மேடு சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us