sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மாணவிக்கு தொல்லை கொடுத்து 62 சவரன் பறித்த வாலிபர் கைது

/

மாணவிக்கு தொல்லை கொடுத்து 62 சவரன் பறித்த வாலிபர் கைது

மாணவிக்கு தொல்லை கொடுத்து 62 சவரன் பறித்த வாலிபர் கைது

மாணவிக்கு தொல்லை கொடுத்து 62 சவரன் பறித்த வாலிபர் கைது


ADDED : நவ 09, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் தீபக், 20; எருக்கூரை சேர்ந்தவர் அபினேஷ், 20; இருவரும், ஓராண்டாக பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் நெருங்கி பழகி வந்தனர்.

மே 9ம் தேதி, இருவரும் மாணவி வீட்டிற்கு சென்றனர். அப்போது மாணவியின் பெற்றோர் இல்லாததால், மாணவியிடம் தீபக் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை அபினேஷ், மொபைல் போனில் போட்டோ எடுத்தார்.

மாணவி கூச்சலிடவே இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அதன் பிறகு, இருவரும், மொபைல் போனில் எடுத்த புகைப்படத்தை காட்டி, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மாணவியை மிரட்டி, அவர் வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம், கொஞ்சமாக, 62 சவரன் நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.

நகைகள் காணாமல் போனது அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் விசாரித்ததில், விபரம் தெரிய வந்தது. இதுகுறித்து, மாணவியின் தாய் நேற்று முன்தினம் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தீபக்கை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து, 16 சவரன் நகைகள் மற்றும் யமஹா பைக்கை பறிமுதல் செய்தனர். தலைமறைவான அபினேஷை தேடி வருகின்றனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us