/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
வாலிபர் கொலை 4 பேருக்கு 'ஆயுள்'
/
வாலிபர் கொலை 4 பேருக்கு 'ஆயுள்'
ADDED : பிப் 22, 2024 02:31 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அடுத்த சின்னகொக்கூர் ஆர்ச் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 22. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், செல்வகுமார் ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்தது.
இதன் காரணமாக, 2020, பிப்., 16ல் ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோர் வீடு புகுந்து சரவணனை தாக்கினர்.
அப்போது ராமச்சந்திரன், செந்தில்குமார் இருவரும் கத்தியால் குத்தியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின்படி, ராமச்சந்திரன், 31, செந்தில்குமார், 33, உறவினர்கள் ஆடுதுறை மாதவன், 37, ரஞ்சித், 34, ஆகியோரை பாலையூர் போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜவேலு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா 1,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.