sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

வன்னியர் சங்க நிர்வாகி கொலை: 9 பேருக்கு 'ஆயுள்'

/

வன்னியர் சங்க நிர்வாகி கொலை: 9 பேருக்கு 'ஆயுள்'

வன்னியர் சங்க நிர்வாகி கொலை: 9 பேருக்கு 'ஆயுள்'

வன்னியர் சங்க நிர்வாகி கொலை: 9 பேருக்கு 'ஆயுள்'


ADDED : நவ 01, 2025 02:17 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறை, கொத்த தெருவை சேர்ந்த வன்னியர் சங்க நகர தலைவர் கண்ணன், 27; இவருக்கும், மயிலாடுதுறை, கலைஞர் நகரை சேர்ந்த கதிரவன், 41, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

கடந்த 2022 ஆக., 17ல் கண்ணன், அவரது நண்பர் ரஞ்சித் டூ - வீலரில் மயிலாடுதுறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது, கதிரவன், அவரது நண்பர்கள் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெ ட்டி கொலை செய்தனர்.

இது தொடர்பாக, கதிரவன் உள்ளிட்ட 22 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

இதனிடையே, 2024 மார்ச் 20ல் கண்ணன் கொலையில் தொடர்புடைய அஜித்குமார், 26, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கண்ணன் சகோதரர் சந்திரமோகன் உள்ளிட்ட 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கண்ணன் கொலை வழக்கில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை முடிந்து, நீதிபதி சத்தியமூர்த்தி தீர்ப்பளித்தார்.

கதிரவன் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us