/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திருவிடைக்கழி கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம்
/
திருவிடைக்கழி கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம்
ADDED : ஆக 18, 2024 09:30 AM

மயிலாடுதுறை: திருவிடைக்கழி கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பந்தல்கால் முகூர்த்த விழா இன்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான சோழ நாட்டு திருச்செந்தூர் என போற்றப்படும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.கும்பாபிஷேகம் வரும் செப்டம்பர் 15ம் தேதி துலா லக்னத்தில் காலை 8:30 மணியிலிருந்து 10 மணிக்குள் நடைபெற உள்ளது.
யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை நந்தகுமார் குருக்கள் தலைமையிலானோர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேம்குமார் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

