sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

சி.பி.எஸ்.இ., என ஏமாற்றிய பள்ளியை கண்டித்து மறியல்

/

சி.பி.எஸ்.இ., என ஏமாற்றிய பள்ளியை கண்டித்து மறியல்

சி.பி.எஸ்.இ., என ஏமாற்றிய பள்ளியை கண்டித்து மறியல்

சி.பி.எஸ்.இ., என ஏமாற்றிய பள்ளியை கண்டித்து மறியல்


ADDED : மார் 21, 2025 11:48 PM

Google News

ADDED : மார் 21, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை; மயிலாடுதுறை காவிரி நகரில் அழகு ஜோதி அகாடமி வித்யாலயா என்ற தனியார் பள்ளி, 18 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடத்தப்படுகிறது.

மாநில கல்வி பாடத்திட்டத்திற்கு அனுமதி பெற்று, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் எனக்கூறி கல்விக் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிப்பதை மாணவர்களின் பெற்றோர் அறிந்தனர்.

இது குறித்து விளக்கம் கேட்பதற்காக நேற்று முன்தினம் மாலை 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இரவு 7:30 மணிக்கு பிறகும் பள்ளி நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பள்ளி முன் மயிலாடுதுறை- - கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக கோஷமிட்டனர். அவர்களிடம் போலீசார், தாசில்தார் தலைமையில் இருதரப்பையும் அழைத்து பேசி தீர்வு காண்பதாக கூறினர்.

அதை ஏற்று பெற்றோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us