/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மணல் திட்டில் சிக்கிய மாடுகள் மீட்பு
/
மணல் திட்டில் சிக்கிய மாடுகள் மீட்பு
ADDED : அக் 17, 2024 09:35 PM

மயிலாடுதுறை:சீர்காழி தாலுகா, சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள மாடுகள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டுகளில் மேச்சலுக்குச் சென்று, மாலை வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் 50க்கும் மேற்பட்ட மாடுகள் ஆற்றில் இறங்கி மணல் திருட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன.
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில், சரஸ்வதி விளாகத்தைச் சேர்ந்த அழகிரி என்பவருக்குச் சொந்தமான 2 பசு மாடுகள் கரைக்கு வர முடியாமல் மணல் திட்டிலேயே சிக்கிக் கொண்டன.
தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று, கொள்ளிடம் ஆற்றில் நீந்தி சென்று 2 பசு மாடுகளையும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.