sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

/

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

2


UPDATED : நவ 15, 2024 04:24 PM

ADDED : நவ 15, 2024 03:13 PM

Google News

UPDATED : நவ 15, 2024 04:24 PM ADDED : நவ 15, 2024 03:13 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி இன்று நடந்தது. காவிரியின் இரண்டு பக்க கரைகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இந்த ஆண்டு சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது.

மயில் உருவில் அபயாம்பிகை அம்மன் சிவனை பூஜித்த மாயூரநாதர் ஆலயம், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர், ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி தென்கரையிலும், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரி வடகரையிலும் எழுந்தருளி அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

தென்கரையில் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையிலும் வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு கரைகளிலும் தீர்த்தவாரி உற்சவம் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து அனைத்து சிவாலயங்களில் இருந்து எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்த காவிரி மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.






      Dinamalar
      Follow us