/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை சிறையில் அடைப்பு
/
நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை சிறையில் அடைப்பு
ADDED : ஆக 25, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்:நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் சாந்தி பழனிசாமி. இவருக்கு சொந்தமான விசைப்படகில், 11 மீனவர்கள், 22ம் தேதி இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கில், 40 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்து, விசைப்படகுடன் இலங்கை பருத்தித்துறைக்கு அழைத்து சென்று, யாழ்ப்பாணம், மீன் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், 11 பேரையும் நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளனர்.

