sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்

/

நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்

நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்

நாகை படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல்


ADDED : செப் 12, 2024 12:37 AM

Google News

ADDED : செப் 12, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடியக்கரை:நாகை மாவட்டம் செருதுாரைச் சேர்ந்த தர்மன், 55, என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நான்கு மீனவர்கள், கடந்த 9ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு கிழக்கில், 30 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை கப்பல், திடீரென இவர்களின் படகு மீது மோதியதில், மீனவர் படகு கவிழ்ந்தது. கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு நான்கு மீனவர்களும் உயிருக்கு போராடினர்.

ஒரு மணி நேரத்திற்கு பின் அவ்வழியே வந்த படகில் இருந்த மீனவர்கள், தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை காப்பாற்றி, கவிழ்ந்த படகையும் மீட்டு, நேற்று காலை கரை திரும்பினர்.

காயமடைந்த மீனவர்கள் நாகை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சம்பவம் குறித்து கீழையூர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us