sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

/

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி

வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி


ADDED : செப் 08, 2024 02:44 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்,:நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா சர்ச்சில், ஆண்டுத் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய நிகழ்வாக நேற்றிரவு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு திருப்பலி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத பிரமுகர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பெரிய சப்பர பவனி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து இன்று மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில், விண்மின் சர்ச்சில் கூட்டுப் பாடல் திருப்பலி நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் ஏற்றப்பட்டிருக்கும், மோர்க்கார சிறுவனுக்கு காட்சியளித்த மாதாவின் திருவுருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us