ADDED : ஆக 02, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் : நாகையில், வீட்டு வாசலில் நின்ற பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
நாகை, வெளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ஈஸ்வரி,41; கணவரை இழந்த இவர் இட்லி கடை நடத்திக் கொண்டு தனது 8 வயது மகனுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்து இறங்கிய மர்ம நபர், ஈஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஈஸ்வரியை மீட்டு, நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.