ADDED : ஆக 02, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் : பட்டா மாறுத லுக்கு விவசாயிடம் ரூ.1,000 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம், உரங்குடியை சேர்ந்தவர் வீரமணி, 45; விவசாயி.
இவர் தனது மனைவி சித்ரா பெயரில் உள்ள பட்டாவில் திருத்தம் செய்ய, திருக்குவளை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். திருத்தம் செய்த பட்டா நகலை வழங்க வி.ஏ.ஓ., ராஜாராமன் ரூ.1,000 லஞ்சம் கேட்டார்.
நேற்று வீரமணி ரூ.1000 வி.ஏ.ஒ.,ராஜாராமனிடம் கொடுத்தப்போது, அங்கு மறைந்திருந்த நாகை, லஞ்ச ஒழிப்பு போலீசார் வி.ஏ.ஓ., வை கைது செய்தனர்.