/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி சர்ச்சில் அன்னதான கூடம் திறப்பு
/
வேளாங்கண்ணி சர்ச்சில் அன்னதான கூடம் திறப்பு
ADDED : மார் 06, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்:இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த முந்தைய 40 நாட்கள், கிறிஸ்துவர்களால் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
முக்கிய நிகழ்வாக இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த 3ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.
தவக்காலம் நேற்று துவங்கியதை முன்னிட்டு, நாகை அடுத்த வேளாங்கண்ணி சர்ச்சில், சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பாதிரியார் அற்புதராஜ் தலைமையில் நடந்தது.
தொடர்ந்து, சர்ச்சுக்கு வருபவர்களுக்கு இலவச அன்னதான கூடம் திறக்கப்பட்டது.

