/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர் மீட்பு
/
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர் மீட்பு
ADDED : ஆக 03, 2024 04:40 AM
நாகப்பட்டினம் : நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை, நாகை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கவுதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 29ம் தேதி, 10 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை வேளாங்கண்ணியில் இருந்து தென்கிழக்கில், இந்திய - இலங்கை கடல் எல்லை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பைபர் படகு மிதப்பதை பார்த்துள்ளனர். சந்தேகமடைந்து பைபர் படகை நெருங்கி பார்த்தப்போது மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பது தெரிய வந்தது. அவரை மீட்ட நாகை மீனவர்கள், அவருக்கு முதலுதவி மற்றும் உணவு வழங்கி, நேற்று நாகைக்கு அழைத்து வந்து, கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், இலங்கை, திரிகோணமலையை சேர்ந்த அகமது இர்பான்,41; என்பதும், கடந்த 20 நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்டின் என்பவருடன் பைபர் படகில் மீன் பிடிக்க புறப்பட்டுள்ளனர். படகு பழுதால் இருவரும் கடலில் தத்தளித்துள்ளனர். உணவில்லாமல் அகமது இர்பான் படகில் மயங்கியுள்ளார். உடனிருந்த அஸ்டின் நிலை என்னவென்று தெரியவில்லை என தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.