/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
மதிப்பெண்ணிலும் ஒற்றுமை சாதித்த இரட்டை சகோதரர்கள்
/
மதிப்பெண்ணிலும் ஒற்றுமை சாதித்த இரட்டை சகோதரர்கள்
ADDED : மே 07, 2024 10:14 PM

நாகப்பட்டினம்:தமிழகத்தில் நேற்று முன் தினம் வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாகையைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள், ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நாகை மாவட்டத்தில்,71 பள்ளிகளில் இருந்து 3012 மாணவர்கள், 3833 மாணவியர் என 6845 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதில் 2645 மாணவர்கள், 3567 மாணவியர் என 6242 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 91.19 ஆக உள்ளது.
வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம், விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரர்களான நிகில், நிர்மல் இருவரும் தலா 478 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அவர்களின் தந்தை செல்லப்பா விவசாயி. இரட்டை சகோதரர்கள் இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

