/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
வேளாங்கண்ணி சர்ச்சில் திருவிழா கோலாகலம்
/
வேளாங்கண்ணி சர்ச்சில் திருவிழா கோலாகலம்
ADDED : ஆக 30, 2024 02:48 AM

நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணியில், கீழை நாடுகளின் லுார்து என்றழைக்கப்படும், ஆரோக்கிய மாதா சர்ச்சில் ஆண்டுதோறும் ஆக., 29ம் தேதி துவங்கி செப்., 8 வரை ஆண்டு திருவிழா நடைபெறும்.
இந்தாண்டு விழாவின் துவக்க நிகழ்ச்சியாக, நேற்று மாலை, லட்சக்கணக்கான பக்தர்களின், 'மரியே வாழ்க' என்ற விண்ணைப் பிளக்கும் கோஷத்துடன் கொடியேற்றம் நடந்தது.
முன்னதாக, மாலை, 5:45 மணிக்கு சர்ச் முகப்பில் இருந்து கொடி பவனி துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
தஞ்சை பிஷப் சகாயராஜ் கொடியை புனிதம் செய்த பின் கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. சர்ச்சில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பெரிய சப்பர பவனி வரும் செப்., 7ம் தேதி இரவு 8:30 மணிக்கு நடக்கிறது. மாதா பிறந்த நாளையொட்டி 8ம் தேதி காலை 6.00 மணிக்கு விண்மின் சர்ச்சில் தஞ்சை பிஷப் சகாயராஜ் தலைமையில் கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, மாலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
விழா நாட்களில் சர்ச் மேல், கீழ் கோவில்கள் மற்றும் விண்மீன் சர்ச்சில் நாள்தோறும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, கொங்கணி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலி நடக்கும்.
சர்ச் கலையரங்கத்தில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், நவநாள் ஜெபம் நடைபெறும்.