sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்

/

இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஏப் 25, 2025 01:39 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:நாகை அருகே, கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

நாகை, வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, இ.சி.ஆர்., சாலையில் செல்லூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், பொட்டலமாக பேக்கிங் செய்யப்பட்டு,10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், சேலம், பவளத்தானூர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கவி வர்ணன்,26, ஜலகண்டபுரம், விக்னேஷ்,21, இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வேதாரண்யம் கடல் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்க கடத்தி வந்தது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்து கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us