/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
'சிவ மந்திரம்' பாட150 பேர் இலங்கை பயணம்
/
'சிவ மந்திரம்' பாட150 பேர் இலங்கை பயணம்
ADDED : செப் 05, 2025 07:25 AM

நாகப்பட்டினம்: இந்தியா - இலங்கையிடையே வர்த்தகம், சுற்றுலா, ஆன்மிக கலாசாரம் மேம்பட, நாகையில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணியர் கப்பல் சேவையை கடந்த 2023, அக்.,14ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
செவ்வாய் கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும், இரு நாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணியர், வியாபாரிகள், ஆன்மிகவாதிகள் கப்பலில் பயணம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 20,000 பேர் கப்பலில் பயணம் செய்ததில், இரு நாட்டிற்கிடையே ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்களே அதிகம்.
இந்நிலையில், உலக சிவனடியார்கள் திருக்கூடம் சார்பில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 150 சிவனடியார்கள், நேற்று கப்பலில் இலங்கை புறப்பட்டு சென்றனர்.
இலங்கை, காங்கேசன் துறை சென்றடையும் சிவனடியார்கள், அங்கிருந்து மன்னார் திருக்கேதிச்சரம் கோவில், நாவற்குடா சிவன் கோவில், மண்டூர் கந்தசாமி கோவில், கங்காதீஸ்வரர் கடற்கரை சிவன் கோவில், பாலசேன பெரியசாமி சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.
இலங்கையில் உள்ள சிவனடியார்களுடன் இணைந்து, அங்குள்ள ஹிந்து மக்களிடம் பக்தியின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்களையும், நன்மைகளையும் கொண்டு வரும் வகையில், சிவ தொண்டு ஈடுபடுகின்றனர்.
தமிழக கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி, கும்மி நடனத்தையும் அந்நாட்டில் அரங்கேற்ற உள்ளனர். இதற்காக சிவனடியார்களில் 70 கலைஞர்கள், இலங்கை தமிழர்களுக்கு வள்ளி, கும்மி நடனத்தை கற்றுத்தர உள்ளனர்.
ஆன்மிக பயணத்தை முடித்து வரும் ஞாயிறு மதியம் நாகை திரும்புகின்றனர்.