/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
ரூ.12,000 லஞ்சம் பெற்ற உதவி இயக்குநர் கைது
/
ரூ.12,000 லஞ்சம் பெற்ற உதவி இயக்குநர் கைது
ADDED : ஏப் 02, 2025 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம்:நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 24.
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் கடனுதவி கோரி, மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தார்.
மாவட்ட தொழில் மைய பரிந்துரைப்படி, ஐ.ஓ.பி., வங்கியால் 5 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. அரசு மானியமாக 1 லட்சத்து 25,000 ரூபாய் விடுவிக்க, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் அன்பழகன், 57, சதீஷ்குமாரிடம் 12,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
நாகை லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சதீஷ்குமார் கொடுத்தபோது, அன்பழகனை, கையும் களவுமாக கைது செய்தனர்.

