sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

பத்திரமாக திரும்பிய மாயமான மீனவர்கள்

/

பத்திரமாக திரும்பிய மாயமான மீனவர்கள்

பத்திரமாக திரும்பிய மாயமான மீனவர்கள்

பத்திரமாக திரும்பிய மாயமான மீனவர்கள்


ADDED : ஆக 12, 2011 10:43 PM

Google News

ADDED : ஆக 12, 2011 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேதாரண்யம்: வேவதாரண்யம் அருகே மீன் பிடிக்க சென்று மாயமான மூன்று மீனவர்கள் நேற்று பத்திரமாக கரை திரும்பினர்.வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த கவிதாசன் (28). ராமனாதன் (60). சிவா (27) ஆகியோர் கடந்த பத்தாம் தேதி மதியம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் மறுநாள் 11ம் தேதி காலை கரை திரும்ப வேண்டும்.ஆனால், இவர்கள் கரை திரும்பாததால் ஆறுக்காட்டுத்துறை பஞ்சாயத்தார் ஜெகநாதன் வேதாரண்யம் கடற்கரை போலீஸிலும், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.இந்நிலையில் நேற்று காலை எட்டு மணியளவில் படகுடன் மூன்று மீனவர்களும் பத்திரமாக கரை திரும்பினர்.

இதுகுறித்து கவிதாசன் கூறியதாவது:நாங்கள் சென்ற படகின் இன்ஜின் பழுதானதால் குறித்த நேரத்தில் திரும்ப முடியவில்லை. அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்கள் இன்ஜினை சரி செய்து கொடுத்ததால் பத்திரமாக நாங்கள் கரை திரும்பினோம். இரண்டு நாட்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்பட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us