/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விதை வாங்கும் விவசாயிகளுக்கு 'பில்'வழங்க வேண்டும்: துணை இயக்குனர்
/
விதை வாங்கும் விவசாயிகளுக்கு 'பில்'வழங்க வேண்டும்: துணை இயக்குனர்
விதை வாங்கும் விவசாயிகளுக்கு 'பில்'வழங்க வேண்டும்: துணை இயக்குனர்
விதை வாங்கும் விவசாயிகளுக்கு 'பில்'வழங்க வேண்டும்: துணை இயக்குனர்
ADDED : பிப் 27, 2025 02:08 AM
விதை வாங்கும் விவசாயிகளுக்கு 'பில்'வழங்க வேண்டும்: துணை இயக்குனர்
நாமக்கல்:'விதை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் விதைகளுக்கு கட்டாயம், 'பில்' வழங்க வேண்டும்' என, சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கான, விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:விவசாயிகளுக்கு, பருவத்திற்கேற்ற தரமான விதைகள் வினியோகிப்பதை உறுதிப்படுத்துவதே, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறையின் நோக்கம். இதனடிப்படையில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும், விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விதை விற்பனையாளர்கள் ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரியாக விதை முளைப்புத்திறன் பரிசோதனை முடிவு அறிக்கையுடன், இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து, இருப்பு வைத்திருக்க வேண்டும். அதேபோல், விதை விற்பனைக்கான பதிவு சான்றிதழை, ஒவ்வொரு விதை விற்பனையாளர்களும் வைத்திருக்க வேண்டும்.
விதை இருப்பு, விலை விபரத்தை நாள்தோறும் பதிவு செய்து விளம்பர பலகை வைத்திருக்க வேண்டும். கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
விதை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை, விவசாயிகளுக்கு கட்டாயம் வழங்கி, அவர்களுடைய கையொப்பம் பெற வேண்டும். இவற்றை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதை உற்பத்தியாளர்களிள் பதிவு சான்றிதழ் புதுப்பிக்கப்படாத விதைகளை, விற்பனையாளர்கள் கண்டிப்பாக விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.