sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'

/

'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'

'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'

'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'


ADDED : பிப் 27, 2025 02:34 AM

Google News

ADDED : பிப் 27, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'அத்திக்கடவு அவினாசி திட்டம் துவங்கிஆறு மாதமாகியும் தண்ணீர் வரவில்லை'

பெருந்துறை:பெருந்துறை அருகே, அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்க்கப்பட்ட குளத்திற்கு, இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை.

பெருந்துறை ஒன்றியம், சுள்ளிபாளையம் ஊராட்சியில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு சொந்தமான நிலத்தில், 8.5 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வந்தால், சுள்ளிபாளையம் மற்றும் சுற்றி உள்ள சிலேட்டர் நகர், கூட்டுறவு நகர், ஐயப்பன் நகர், பள்ளக்காட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணற்றின் நிலத்தடி நீர் உயரும். இந்த குளம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் சேர்த்தபோது, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து தினமும் மக்கள் குளத்திற்கு தண்ணீர் வருவதை காண சென்றனர். ஆனால் ஆறு மாதங்களாகியும் இதுவரை ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. வரும் கோடையில், குடிநீர் தட்டுப்பாட்டையும், கால்நடைகளின் தண்ணீர் தேவையை சமாளிக்கவும், அரசு நடவடிக்கை எடுத்து குளத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.






      Dinamalar
      Follow us