sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

'இன்ஸ்டா'வில் காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு

/

'இன்ஸ்டா'வில் காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு

'இன்ஸ்டா'வில் காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு

'இன்ஸ்டா'வில் காதலிப்பது போல் நடித்து பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு


ADDED : செப் 04, 2025 02:25 AM

Google News

ADDED : செப் 04, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், 'இன்ஸ்டாகிராம்' மூலம் பிளஸ் 2 மாணவி, ஒருவரை காதலித்தார். அவர் அறிவுறுத்தல்படி, சேலம் வந்த மாணவியிடம், நகைகள், லேப்டாப், மொபைல் போனை, அந்த வாலிபர், நுாதனமாக பறித்துச்சென்றார்.

சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' மூலம், ஈரோட்டை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து மொபைல் போன் மூலம் பேசினர்.

அப்போது அந்த நபர், 'என் பெயர் ராகுல். ஈரோட்டில் வசித்துக்கொண்டு கல்லுாரியில் படிக்கிறேன்' என தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் காதலித்த நிலையில், ராகுல், 'உன்னை பார்க்க வேண்டும்' என கூறியுள்ளார். கடந்த, 1ல் சென்னையில் இருந்து ரயில் மூலம் மாணவி புறப்பட்டார். அப்போது ராகுல், சேலத்தில் இருப்பதாகவும், அங்கேயே இறங்கும்படி அறிவுறுத்தினார். அவரும், இரவு, 9:00 மணிக்கு, சேலம் வந்து ராகுலை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து வெளியே புறப்படவிருந்த நிலையில், மாணவி கழிப்பறை செல்ல

வேண்டும் என கூறினார்.

அதற்கு ராகுல், 'இங்கு திருட்டுகள் அதிகம் நடக்கின்றன. யாராவது நகையை பறித்துவிடுவர். நகைகளை கழற்றி கொடுத்து விட்டு செல்' என கூறியுள்ளார். அதை நம்பிய மாணவி, அவர் அணிந்திருந்த, 2 வளையல், சங்கிலி உள்பட, 4 பவுன் நகைகள், அவரிடம் இருந்த லேப்டாப், மொபைல் போனை, ராகுலிடம் கொடுத்துச்சென்றார். சிறிது நேரத்துக்கு பின் வந்தபோது, ராகுலை காணவில்லை. அவரது மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் தேடியும் காணாததால், அதிர்ச்சி அடைந்த மாணவி, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெற்றோரிடம், போன் மூலம் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து நேற்று முன்தினம் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us