sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

/

காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்


ADDED : பிப் 08, 2025 12:47 AM

Google News

ADDED : பிப் 08, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலாவதி மாத்திரைகள் ஏரியில் வீச்சு சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்

ராசிபுரம்,: ராசிபுரம் - சேலம் சாலையில், 80 ஏக்கர் பரப்பளவில் ராசிபுரம் ஏரி உள்ளது. இங்கு, மட்காத குப்பையை, அருகில் உள்ளவர்கள் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில சமயம், தீ வைத்து விடுகின்றனர். கடந்த வாரம் இதுபோல் வைக்கப்பட்ட தீ, அருகில் இருந்த முள் செடிகளுக்கும் பரவியது. நேற்றும், இதேபோல் மற்றொரு பகுதியில் தீ பரவியது.

இந்நிலையில், பழைய சேலம் சாலை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த சாலையை ஒட்டி ஏரியின் கரையோர பகுதியில்

காலாவதியான மருந்து பாட்டில்கள், மாத்திரை அட்டைகள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து மருத்துவ கழிவுகளை கொட்டாமல் இருந்தனர். தற்போது மீண்டும் மாத்திரைகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us