/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியதுநம் கடமை: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
/
இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியதுநம் கடமை: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியதுநம் கடமை: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியதுநம் கடமை: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
ADDED : பிப் 19, 2025 02:18 AM
இளம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியதுநம் கடமை: கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு
நாமக்கல்:''தற்போது ஆன்லைனில் கூட போதைப்பொருட்கள் எளிதில் கிடைத்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது என்பது ஒரு யுத்தம் போன்றது. இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை,'' என, கருத்தரங்கில், கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தை, போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒருவர் போதைப்பொருளை பயன்படுத்துவதால், சுய சிந்தனையின்றி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் நடவடிக்கைகளை நாம் கண்காணிக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு என்ற உயர்நிலையில், ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களாகிய நீங்கள் தான், மாணவ, மாணவியருக்கு தாய், தந்தையாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும். இது தனிநபர் சார்ந்த பிரச்னை இல்லை. சங்கிலி தொடர்போல பல்வேறு நிலைகளில் சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதனால், ஆண், பெண் குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. தற்போது ஆன்லைனில் கூட போதை பொருட்கள் எளிதில் கிடைத்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது என்பது ஒரு யுத்தம் போன்றது. இந்த யுத்தத்தில் வெற்றி பெற்று வளரும் இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
தகவல் தொழில் நுட்பம் நிறைந்த இன்றைய காலத்தில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகளை, சுய தொழில் முனைவோர்களாக ஊக்குவிக்க வேண்டும். பாதுகாப்பான சூழ்நிலையை நம் குழந்தைகளுக்கு நாம் உருவாக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., பார்த்தீபன், கூடுதல் எஸ்.பி.,க்கள் சண்முகம், தனராசு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தா அருள்மொழி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கனகமாணிக்கம் உள்பட
பலர் பங்கேற்றனர்.

