தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை


ADDED : மார் 26, 2025 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதல்கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை

மல்லசமுத்திரம்:தென்னை ஓலையில் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து, மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெயப்பிரபா யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மல்லசமுத்திரம் வட்டாரத்தில், தென்னை மரங்களின் ஓலைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, மஞ்சள் நிற பாலித்தின் தாள்களால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகள், 5 அடிக்கு, 1.5 அடி என, ஏக்கருக்கு, 8 வீதம், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மேலும், தாக்கப்பட்ட மரத்தின் கீழ்மட்ட ஒலைகளின் உட்பகுதியில் படுமாறு, மிகவேகமாக தண்ணீரை விசை தெளிப்பான் கொண்டு பீய்ச்சி அடித்து, ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம்.

வெள்ளை ஈக்களின் இளங்குஞ்சுகளை கட்டுப்படுத்த, ஒட்டுண்ணி திறன் கொண்ட, 'என்கார்சியா' குளவியின் கூட்டுப்புழு உள்ளடங்கிய தென்னை ஓலைகள் ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகள் மீது, 10 மர இடைவெளியில் வைத்தும் கட்டுப்படுத்தலாம். கிளரசோபிட் என்ற பச்சை கண்ணாடி, இறக்கை பூச்சியின் இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு, 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்து கட்டுப்படுத்தலாம்.

சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலால், தென்னை ஓலையில் ஏற்படும் கரும்பூசணத்தை கட்டுப்படுத்த மைதா மாவு கரசலை ஒரு லிட்டர் தண்ணீரில், 25 கிராம் மற்றும் ஒட்டும் திரவம், 1 மி.லி., சேர்த்து கீழ் இலை அடுக்குகளின் மேல் படுமாறு தெளித்தால், 3 முதல், 5 நாட்களில் இலைகளில் படிந்திருந்த கரும்பூசணங்கள் வெயிலில் காய்ந்து உதிர்ந்து விடும்.

இயற்கை எதிரிகளான என்கார்சியா ஒட்டுண்ணி குளவிகள் மற்றும் கிரைசோபிட் இரைவிழுங்கிகள் தோப்புகளில் இயற்கையாக இனப்பெருக்கம் அடைய சாமந்தி பூ, சூரியகாந்தி, தட்டைப்பயறு போன்ற பயிர்களை தென்னந்தோப்புகளில் பயிர் செய்ய வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us