/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒன்றரை மணி நேரம் கனமழை மோகனுாரில் மின் தடையால் அவதி
/
ஒன்றரை மணி நேரம் கனமழை மோகனுாரில் மின் தடையால் அவதி
ஒன்றரை மணி நேரம் கனமழை மோகனுாரில் மின் தடையால் அவதி
ஒன்றரை மணி நேரம் கனமழை மோகனுாரில் மின் தடையால் அவதி
ADDED : ஏப் 12, 2025 01:22 AM
ஒன்றரை மணி நேரம் கனமழை மோகனுாரில் மின் தடையால் அவதி
நாமக்கல்,நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.அதனால், மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று மாலை, நாமக்கல்லில் கனமழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் மழை காரணமாக, பலரும் குடையை பிடித்துக்கொண்டும், மழையில் நனைந்தபடியும் திரும்புவதை காண முடிந்தது.
குறிப்பாக, நாமக்கல் - பரமத்தி சாலையில், மழைநீர் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மழை காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.
மோகனுார் அடுத்த பாலப்பட்டியில் பலத்த காற்று காரணமாக, மாலை, 6:00 மணிக்கு உயரழுத்த மின் கம்பியில், தென்னை மட்டை விழுந்து மின் தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் மட்டைகளை அகற்றி, இரவு, 7:30 மணிக்கு, மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். இதனால், பாலப்பட்டி, எஸ்.வாழவந்தி, மோகனுார் உள்ளிட்ட பகுதிகளில், ஒன்றரை மணி நேரம் மின் தடையால் மக்கள் அவதிப்பட்டனர்.