/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 14, 2024 01:41 AM
நாமக்கல், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மாதேஸ் தலைமை வகித்தார். அதில், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க வேண்டும். தனியார் துறை மூலம் வருமான வரிப்பிடித்தம் செய்யும் முறையை கைவிட்டு பழைய நடைமுறைப்படி, ஆசிரியர்களின் விருப்பப்படி வருமான வரி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.