sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்

/

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்


ADDED : பிப் 05, 2025 01:12 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியான விண்ணப்பம் வரவேற்பு: கலெக்டர்

நாமக்கல் : 'வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல், 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களின் துயரை துடைக்கும் வகையில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாய், மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 -ரூபாய், பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய் வீதம், மூன்றாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை இனி வரும் காலங்களில், மாதம் ஒன்றுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்களுக்கு, 600 ரூபாய்,- மேல்நிலை

கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 750 ரூபாய், பட்டதாரிகளுக்கு, 1,000 ரூபாய் வீதம், பத்தாண்டிற்கு வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் தற்போது, கடந்த, 1 முதல் வரும், மார்ச், 31 வரையிலான காலாண்டிற்கு, மேற்கண்ட கல்வி தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்கள், ஒரு ஆண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள். மேற்கண்ட தகுதியுடையவர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு, அனைத்து அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் செல்லலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து

பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us