sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

பூச்சிகளை விரட்ட அரப்பு மோர்கரைசலை பயன்படுத்த ஆலோசனை

/

பூச்சிகளை விரட்ட அரப்பு மோர்கரைசலை பயன்படுத்த ஆலோசனை

பூச்சிகளை விரட்ட அரப்பு மோர்கரைசலை பயன்படுத்த ஆலோசனை

பூச்சிகளை விரட்ட அரப்பு மோர்கரைசலை பயன்படுத்த ஆலோசனை


ADDED : பிப் 15, 2025 01:53 AM

Google News

ADDED : பிப் 15, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூச்சிகளை விரட்ட அரப்பு மோர்கரைசலை பயன்படுத்த ஆலோசனை

நாமகிரிப்பேட்டை:'பூச்சிகளை விரட்ட அரப்பு மோர் கரைசலை பயன்படுத்த வேண்டும்' என, நாமகிரிப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதுகுறிதது, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அதிகம் கிடைக்கும் அரப்பு இலை அல்லது உசிலை மர இலைகளை, 2 கிலோ அளவில் பறித்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக நீருடன் சேர்த்து அரைக்க வேண்டும். இதிலிருந்து, 5 லிட்டர் அளவில் கரைசல் எடுத்து புளித்த மோருடன் சேர்க்க வேண்டும். பின், இந்த கரைசல் கலவையை மண்பானையில் ஒரு வார காலத்துக்கு புளிக்கவிட வேண்டும். ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசலுடன், 10 லிட்டர் தண்ணீர் கலந்து விவசாயிகள் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம்.

அரப்பு மோர் கரைசல் தெளிப்பதன் மூலம் இரண்டு விதமான பலன்கள் கிடைக்கும். அதாவது, அரப்பு மோர் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் துார ஓடிவிடும். குறைந்த செலவில் விவசாயிகள் தங்களின் வீடுகளில், வயல்களில், தோட்டங்களில் உள்ள பயிரை எளிதாக பாதுகாக்க முடியும். அரப்பு மோர் கரைசலை பூப்பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகமாக காணப்படும். நிறைய பூக்கள் பூக்கும். இந்த கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால், பயிர்கள் குறைந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை தந்து, எதிர்பார்க்கும் விளைச்சலை கொடுக்கும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us