sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

இருவேறு வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு இறப்பை துாண்டும்

/

இருவேறு வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு இறப்பை துாண்டும்

இருவேறு வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு இறப்பை துாண்டும்

இருவேறு வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு இறப்பை துாண்டும்


ADDED : பிப் 19, 2025 02:17 AM

Google News

ADDED : பிப் 19, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருவேறு வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு இறப்பை துாண்டும்

நாமக்கல்:'இருவேறு வெப்ப அளவுகளால், எடை அதிகரித்த கோழிகளுக்கு வெப்ப அயற்சி ஏற்பட்டு, இறப்பை துாண்டும்' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தின் கடந்த வார வானிலையில், பகலில், 96.8 டிகிரி பாரன்ஹீட், இரவில், 62.8 டிகிரி பாரன்ஹீட்டாக நிலவியது. மாவட்டத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் தெளிவாகவும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம், 96.8 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப்பம், 66.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று பெரும்பாலும் கிழக்கு திசையிலிருந்து, மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் வீசும். தற்போது நிலவி வரும் குறைந்த இரவு வெப்பமும், அதிகரித்து வரும் பகல் நேர வெப்பமும் கோழிகளுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்தும். குறைந்த வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில், அதிக தீவனம் எடுக்க நேரிடும். பகலில் அதிக வெப்பம் இதற்கு நேர்மாறாக அயற்சியை ஏற்படுத்தி, எடை அதிகரித்த கோழிகளில் இறப்பை துாண்டிவிடக்கூடியது. அதனால், இருவேறு விதமான வெப்ப அளவுகளை எதிர்கொள்ளும் வகையில், தீவனத்தில் வெப்ப அயற்சி நீக்க வைட்டமின் சி மற்றும் கோலின் குளோரைடு மருந்துகளை சேர்த்து வர வேண்டும்.மேலும், கோடைக்காலம் விரைவில் வர உள்ளதால், கோழிப்பண்ணைகளின் நீராதாரங்கள், நீர் குழாய்கள், நீர் தெளிப்பான்கள் மற்றும் நிப்பிள்களில் அடைப்பை நீக்கி தயாராக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us